என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தனுஷ் நிதி உதவி
Byமாலை மலர்3 Aug 2017 5:16 AM GMT (Updated: 3 Aug 2017 5:16 AM GMT)
வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 130 பேருக்கு நடிகர் தனுஷ் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
தமிழகத்தில் பருவமழை முறையாக பெய்யாததால் வறட்சி ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இதனால் மனமுடைந்த தமிழக விவசாயிகள் 130 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க நடிகர் தனுஷ் முடிவு செய்தார்.
அதன்படி அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று அவர் வந்தார். பின்னர் தனது தாயார் விஜயலட்சுமி பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை சார்பில் தேனி உள்பட தமிழகம் முழுவதும் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 130 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தனுசின் மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனுசின் தாயார் விஜயலட்சுமி, இயக்குனர் சுப்பிரமணியசிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அதன்படி அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று அவர் வந்தார். பின்னர் தனது தாயார் விஜயலட்சுமி பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை சார்பில் தேனி உள்பட தமிழகம் முழுவதும் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 130 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தனுசின் மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனுசின் தாயார் விஜயலட்சுமி, இயக்குனர் சுப்பிரமணியசிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X