என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
Byமாலை மலர்23 May 2017 5:21 AM GMT (Updated: 23 May 2017 5:21 AM GMT)
விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா வருகிற ஜுன் மாதத்தில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதன்படி, தற்போது விஷாலுடன் ‘இரும்பு திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கண்கள்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமொன்றிலும், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய்-அட்லி கூட்டணி தற்போது ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இம்மாத இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பியதும் விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமொன்றிலும், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய்-அட்லி கூட்டணி தற்போது ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இம்மாத இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பியதும் விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X