search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷெபாஸ் ஷரீப்"

    • தேர்தலில் மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன
    • இம்ரான் கான் கட்சியின் உறுப்பினர்களின் "சன்னி இதெஹத் கவுன்சில்", ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது

    241 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில், பிப்ரவரி 8 அன்று, தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் "பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப்" (PTI) கட்சி போட்டியிட "பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்" (PEC) தடை விதித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பெரிய அளவிலான மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன.

    பெரும் சர்ச்சைக்கு இடையே நடந்த இந்த தேர்தலுக்கு பிறகு, முடிவுகளை அறிவிப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாமதம் ஏற்பட்டது.

    பிடிஐ கட்சியின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வென்றனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், "சன்னி இதெஹத் கவுன்சில்" (Sunny Ittehad Council) எனும் அமைப்பை உருவாக்கினர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் "பாகிஸ்தான் மக்கள் கட்சி" (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றது.


    தனிப்பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று, "நேஷனல் அசெம்பிளி" (National Assembly) என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ்சபை (Lower House) பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.

    இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் (Shehbaz Sharif) மீண்டும் பிரதமராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாம் முறை ஷெபாஸ் ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) தெரிவித்தார்.

    336 உறுப்பினர்களை கொண்ட நேஷனல் அசெம்பிளியில் 201 வாக்குகள் பெற்று ஷெபாஸ் ஷரீப், 92 வாக்குகள் பெற்ற ஒமர் அயுப் கான் எனும் போட்டி வேட்பாளரை வென்றார்.

    "சன்னி இதெஹத் கவுன்சில்" ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது.

    பிரதமர் பதவிக்கு குறைந்தபட்சம் 169 ஆதரவு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை தொடங்கியவரும், 3 முறை பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தவருமான நவாஸ் ஷெரீப்-பின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துணை ராணுவத்தினர் கைது செய்தனர்.
    • கைதை கண்டித்து சாலைகளில் திரண்ட இம்ரான் ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அலுவலக வீட்டை முற்றுகையிட்டுனர். அவர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பிரதமர் அலுவலக இல்லத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    ×