search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் எந்திரங்கள்"

    • ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணி களை மேற்கொள்ளவும், அறுவடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்களான டிராக்டர்,பவர் டில்லர், நாற்று நடும் எந்திரம், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம்உ ள்ளிட்ட எந்திரங்களும், கல்டி வேட்டர், ரோட்ட வேட்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப்ப டுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில், 2022-23 ஆண்டு 2-ம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.206 கோடி மதிப்பிலான 60 வேளாண் எந்திரங்கள் ரூ.84.55 லட்சம் மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு

    முதல்-அமைச்சர் அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதும் 5000 பவர்டில்லர், பவர் வீடர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பிலான 62 பவர் டில்லர் மற்றும் 11 களையெடுக்கும் கருவிகள் ரூ.55.81 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான 133 வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
    • வேளாண் பொறியியல் துறை சார்பில் நடந்தது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் விவசாயி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் துறை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு பால்வளத்து றை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயி களின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்கு றை நிவர்த்தி செய்யப்படு வதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது. நடப்பு 2023-24-ம் நிதியாண்டில், வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2023-24-ன் படி, சிறு, குறு விவசாயிகள் சிறிய வேளாண் எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன்பெறும் நோக்கத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட கிராமங்களுக்கு 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 27 பவர் டில்லர்கள் மற்றும் 13 விசை களை எடுப்பான் கருவிகள் ஆக மொத்தம் 40 எண்கள் விவசாயிகளுக்கு சுமார் ரூ.27.94 லட்சம் மானியத்தில் வழங்கப்படு கிறது. மேலும் உழவன் செயலி வாயிலாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் விவசா யிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தில், 50 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு ரூ.85 ஆயிரம், விசை களை எடுப்பான்களுக்கு ரூ.63 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசா யிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்ப டுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பிரின்ஸ் எம்.எல்.ஏ., வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.
    • பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி,

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் (கிராம ஊராட்சிக்கு இரண்டு அல்லது மூன்று) வழங்க ஒதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இதில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி மாவட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டில் 49 கிராம ஊராட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி, தருமபுரி வட்டாரத்தில் குப்பூர், A. கொல்லஅள்ளி, நல்லசேனஅள்ளி, கடகத்தூர், கிருஷ்ணாபுரம், அரூர் வட்டாரத்தில் பொன்னேரி, வடுகப்பட்டி, சின்னாகுப்பம், தீர்த்தமலை, கொக்காரப்பட்டி, கோபிநாதம்பட்டி, கோபாலபுரம், கடத்தூர் வட்டாரத்தில் தாளநத்தம், மோட்டாங்குறிச்சி, ரேகடஅள்ளி, சுங்காரஅள்ளி, கார்த்தனூர், காரிமங்கலம் வட்டாரத்தில் பேகாரஅள்ளி, கோவிலூர், எழுமிச்சனஅள்ளி,

    மல்லிக்குட்டை, அண்ணாமலைஅள்ளி, மொரப்பூர் வட்டாரத்தில் ஜக்குபட்டி, கோபிநாதம்பட்டி, பன்னிகுளம், போளையம்பள்ளி, நல்லம்பள்ளி வட்டாரத்தில் கம்மம்பட்டி, கோணங்கி அள்ளி, பூதானஅள்ளி, மாதேமங்கலம், எச்சனஅள்ளி, பேடரஅள்ளி, பாலக்கோடு வட்டாரத்தில் கணபதி, பேவுஅள்ளி, சூடணூர், செக்கோடி, M.செட்டிஅள்ளி, சிக்காதோரணபெட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் மஞ்சவாடி, பாப்பம்பாடி, போதகாடு,

    மெணசி, ஏரியூர் வட்டாரத்தில் கேண்டேனஅள்ளி, அஜ்ஜனஅள்ளி மற்றும் பென்னாகரம் வட்டாரத்தில் அஞ்சேஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, வேப்பிலைஅள்ளி, மாதேஅள்ளி, ஆச்சாரஅள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை சார்ந்த விவசாயிகள் மானியத்தில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவி மானியத்தில் பெற சிட்டா, அடங்கல்,

    நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு நகல், மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைபேசி: 04342-296132) மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பணை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின்ரோடு, அரூர் (தொலைபேசி: 04346-296077) அலுவலகங்களை தொடர்புகொண்டு விண்ணப்பங்களை உடனடியாக அலுவலகத்தில் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×