search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு திட்டம்"

    • இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி

    அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க கோரியும், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீவட்டிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காடையாம்பட்டி மேற்கு வட்டார தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய கவுன்சிலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காடையாம்பட்டி கிழக்கு வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், நகரத் தலைவர் ஹரிசந்திரன், கிராம கமிட்டி தலைவர் பழனி தேவன், நிர்வாகிகள் பெருமாள், தர்மலிங்கம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு

    ஏற்காட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏற்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    தாரமங்கலம்

    தாரமங்கலம் சந்தைப் பேட்டை அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி செல்வம், நிர்வாகிகள் லக்ஷ்மன், தட்சிணாமூர்த்தி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்ககிரி

    சங்ககிரியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்குமார் தலைமை வகித்தார். சங்ககிரி வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், பழக்கடை ராமமூர்த்தி, சின்னுசாமி, மூத்த நிர்வாகிகள் அங்கமுத்து, ஆறுமுகம், இஸ்மாயில், காமராஜ், சந்திரன், ஜெகநாதன், பஸ் ஆறுமுகம், விஸ்வநாதன், கிரி, ரவி, பரமன், மளிகை குமார், மாணவர் காங்கிரஸ் அகில், வெர்ஸிலி, இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, தேவூர் நாகேந்திரன், பொன்சித்தையன், அரசிராமணி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகித்தனர்.

    • நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார்.

    பணி நியமன முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கும் உறவு முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வேலை வழங்கும் (ரோஸ்கர் மேளா) திட்டம் என்பது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தேசிய வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதுமாகும். இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதே நேரத்தில் நாடு முழுவதும் 45 இடங்களில் மோடியின் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு பணி ஆணைகளை மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்கள்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்காளர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமைக் காவலர், உதவி கமாண்டன்ட், பள்ளி, கல்லூரி முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 3 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.

    சென்னையில் அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி தி.நகர் வாணிமகாலில் நடந்தது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்று பணி ஆணைகள் வழங்கி ஆற்றிய உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    அதை தொடர்ந்து 11.05 மணிக்கு சென்னை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 247 பேருக்கு வேலைக்கான பணி ஆணைகளை நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

    இவர்களில் 188 பேர் அஞ்சல் துறையிலும், ரெயில்வே துறையில் 60 பேரும், பாதுகாப்பு மற்றும் கல்வித்துறையில் தலா 15 பேரும், பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் 8 பேரும், சுகாதாரத்துறையில் ஒருவருக்கும் வேலை வழங்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் பிரதமரின் திட்டம் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வேலைவாய்ப்பு பெற்றவர்களுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி, அஞ்சல் மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவின் தலைவர் ஸ்ரீதேவி, சென்னை மண்டல இயக்குனர் சோம சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருச்சி ரெயில்வே மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு திருச்சி மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 127 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 180 பேர் தபால் துறையிலும் 20 பேர் ரெயில்வே துறையிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

    சென்னையில் 247 பேர், திருச்சியில் 127 பேர், மதுரையில் 180 பேர் என மொத்தம் தமிழகத்தில் 574 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    ×