search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ கால் வசதி"

    • சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
    • வீடியோ கால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜெயில் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
    • மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம்

    வேலூர்:

    தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உட்பட 142 சிறைகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பதவி ஏற்ற பின் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சட்டசபையில் நடந்த கூட்டத்தின் போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்து இருந்தார்.

    அதன்படி நேற்று சென்னை புழல் சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை டிஜிபி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். கொரோனா காலத்தில் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வேலூர் ஆண்கள் சிறையில் ஏற்கனவே வீடியோ கால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வேலூர் பெண்கள் தனி சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை வேலூர் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    பெண் கைதிகள் தங்களது உறவினர்களிடம் 3 நாளைக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் பேசலாம். அல்லது மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம் என்பதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    ×