search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயியிடம்"

    • விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கண்ணன் என்பவரை மொடக்குறிச்சி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் அடுத்த சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த பூசாரி கருப்பு மகன் சிவாஜி. விவசாயி. இவருக்கு உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார்.

    சிவாஜியிடம் பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்தவரிடம் ரூ.35 லட்சம் பணம் கொடுத்தால் ரூ.50 லட்சம் 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கு வதாக தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்துடன் உறவி னர்கள் செந்தில், மாதேஷ், குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.

    இதையடுத்து ராஜ்குமார் 2 பேருடன் சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் பெரு ந்துறை நோக்கி புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே மற்றொரு காரில் இருந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து அதிகாரிகள் என கூறி ரூ.35 லட்சத்துடன் 7 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பி சென்றனர்.

    இது குறித்து மொட க்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கரூர் மாவட்டம் மலைக்கோவி லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீஸ் போல் நடித்த நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் புதுப்பாளையம் மணமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த கரூர் மாவட்டம் சக்தி நகர் பகுதி யை சேர்ந்த கண்ணன் (52) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மேலும் கண்ணனிடம் இருந்த நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரை போலீ சார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து தலைமறைவான மற்ற வர்களை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.

    • காரில் 35 லட்சம் ரூபாய் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
    • மொடக்குறி ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடன டியாக தனிப்படை அமைக்கப்பட்டது.

     மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்ப ட்டியைச் சேர்ந்த பாண்டி 50 என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுக மாகினார்.

    சிவாஜியிடம் பாண்டி என்பவர் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகள வில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி கூறி உள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி 15 லட்சம் ரூபாய் பணம் கமிஷனாக கிடைப்பதால் 35 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து க்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார்.

    பரிசல்துறைக்கு வந்தவு டன் ராஜ்குமாருக்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து வந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் 35 லட்சம் ரூபாய் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி எனது பணம் 35 லட்சத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறி ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடன டியாக தனிப்படை அமைக்க ப்பட்டது. பின்னர் லக்காபுரம் பரிசல் துறை சோலார் உள்ளிட்ட இடங்களில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை மொடக்கு றிச்சி போலீசார் முதல் கட்டமாக ஆய்வு செய்து வருகின்றனர். தவிர மொ பைல் எண்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு ள்ளனர்.

    மேலும் சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறையில் கேரளா கும்பல் கைவரிசை காட்டியது போல் சிவாஜியிட மும் அந்த கும்பல் கைவரிசை காட்டினார்களா? ராஜ்குமார் என்பவர் யார்? பாண்டிக்கும் ராஜ்குமாருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கோணத்தில் மொடக்குறிச்சி போலீசார் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாட்டு வைத்தியர் என்று சொல்லி அங்கு வந்த ஒரு நபர் குமாரசாமிக்கு காலில் உள்ள மூட்டு வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்வதாக கூறினார்.
    • போலி நாட்டு வைத்தியர் ஊமைத்துரை (49) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள கவு ண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

    இவருக்கு காலில் மூட்டு வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வைத்தியம் பார்ப்பது சம்பந்தமாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்.

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாட்டு வைத்தியர் ஒருவர் இதற்கு நல்ல மருந்து கொடுத்து எளிதில் குணப்படுத்துவதாக அவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் கூறி உள்ளார்.

    இதையடுத்து நாட்டு வைத்தியர் என்று சொல்லி அங்கு வந்த ஒரு நபர் குமாரசாமிக்கு காலில் உள்ள மூட்டு வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்வதாக கூறினார். இதை குமாரசாமி நம்பியுள்ளார்.

    இதையடுத்து நாட்டு வைத்தியர் குமாரசாமி அவரது மனைவி மற்றும் மகனிடம் பவுடர் போன்ற ஒரு பொடியை கலந்து அவர்களது கால் மற்றும் உடலில் தடவி உள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் சுய நினைவை இழந்து வீட்டில் வைத்திருந்த பணம் 48 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ¾ பவுன் தங்கதோடு ஆகியவற்றை அவர்களே அந்த நபரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு சரியான சுயநினைவு இல்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கத்தோடு ஆகியவை காணாமல் போனதை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களில் அந்த நாட்டு வைத்தியர் குறித்து விசாரணை செய்துள்ளனர்.

    அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தால் இறுதியாக குமாரசாமி சென்னிமலை போலீசில் இந்த மோசடி குறித்து புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி பணம் மற்றும் தங்க தோடை மோசடி செய்து எடுத்துச் சென்ற அந்த நபரை பற்றி விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் தொட்டியம், தெற்கு ஆரங்கூர், முல்லை நகர் பகுதியை சேர்ந்த போலி நாட்டு வைத்தியர் ஊமைத்துரை (49) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×