search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 people who extorted"

    • காரில் 35 லட்சம் ரூபாய் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
    • மொடக்குறி ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடன டியாக தனிப்படை அமைக்கப்பட்டது.

     மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்ப ட்டியைச் சேர்ந்த பாண்டி 50 என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுக மாகினார்.

    சிவாஜியிடம் பாண்டி என்பவர் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகள வில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி கூறி உள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி 15 லட்சம் ரூபாய் பணம் கமிஷனாக கிடைப்பதால் 35 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து க்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார்.

    பரிசல்துறைக்கு வந்தவு டன் ராஜ்குமாருக்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து வந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் 35 லட்சம் ரூபாய் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி எனது பணம் 35 லட்சத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறி ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடன டியாக தனிப்படை அமைக்க ப்பட்டது. பின்னர் லக்காபுரம் பரிசல் துறை சோலார் உள்ளிட்ட இடங்களில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை மொடக்கு றிச்சி போலீசார் முதல் கட்டமாக ஆய்வு செய்து வருகின்றனர். தவிர மொ பைல் எண்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு ள்ளனர்.

    மேலும் சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறையில் கேரளா கும்பல் கைவரிசை காட்டியது போல் சிவாஜியிட மும் அந்த கும்பல் கைவரிசை காட்டினார்களா? ராஜ்குமார் என்பவர் யார்? பாண்டிக்கும் ராஜ்குமாருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கோணத்தில் மொடக்குறிச்சி போலீசார் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×