search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கோரிக்கை"

    • பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது.
    • அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவனுார்புதுார், ஆண்டியூர், வலையபாளையம், ராவணாபுரம், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன் சோலை உள்ளிட்ட 15-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தில், காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பல சிற்றாறுகள் சமவெளியை நோக்கி கரைபுரண்டு ஓடியது. இதனால், எங்கள் பகுதி வளமிக்கதாக இருந்தது. சிற்றாறுகளில் இருந்த நீரோட்டத்தால், நீர்மட்டம் குறையாமல் இருந்தது. காண்டூர் கால்வாய் கட்டப்பட்ட பிறகு, சிற்றாறுகளின் நீர்வரத்து, முழுமையாக தடைபட்டு, கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்று விடுகிறது. இதனால், மலை அடிவாரத்திலுள்ள அனைத்து சிற்றாறுகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு எவ்வித பாசன திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சியளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல கிராம விவசாயிகள், தற்போது ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அதில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளுக்கு, தனியாக பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சிற்றாறுகளில், இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாயை அடைகிறது. அந்த தண்ணீரை அருகிலுள்ள விளை நிலங்களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டிய பிறகு இயற்கையான முறையில் கிடைக்கும் தண்ணீர் தடைபட்டுள்ளது. அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    • சோழவந்தானில் பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாய பூமியாகும். இங்கு முல்லை பெரியாறு பாசன நீர் மூலம் 3 போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக விளங்கும் சோழவந்தானில் பொதுப்பணித்துறை அதி காரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தானில் உள்ள வடகரை கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை 40அடி கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி பெறமுடியாமல் உள்ளன. மேற்கண்ட கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்க வலை விரித்து வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 40 அடி கால்வாயை தூர்வாரி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×