search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கான பயிற்சி"

    • அல்போன்சா, நீலம் மற்றும் செந்தூரா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோதாபுரி, அல்போன்சா, நீலம் மற்றும் செந்தூரா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    பருவ நிலை மாற்றத்தினாலும் பூக்கும் பருவத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலாலும் மா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

    மா பூத்திருக்கும் இந்த நிலையில் விவசாயிகளிடயே மா பயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும்.

    டிசம்பர்-ஜனவரி மாதங்களில் மா மரங்கள் பூக்கும் நிலையில் பூக்களைத் தாக்கும் தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்திட தைமீத்தோஸாம் 0.20 கிராம்- ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

    அடுத்து ஏப்ரல் மாதத்தில் பிஞ்சு காய்களை சேதப்படுத்தக்கூடிய புழுக்களான மா இலைப்புழு மற்றும் காவனப் புழுக்களை கட்டுப்படுத்திட அசாராக்டின் 1500 பி.பி.எம். 4 மில்லி-1 லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

    பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து மா மகசூலைப் பாதுகாத்திட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 6 வட்டாரங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி அந்தந்த வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி சிலுவம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • உதவி வேளாண்மை அலுவலர் சதிஸ்குமார் வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், பயிர்க் காப்பீடு திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் உயிர் உரங்கள் மூலம் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி சிலுவம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு பயிற்றுநர் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன் கலந்து கொண்டு, பசுந்தாள் எருவானது நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்வதன் மூலம் சத்துக்கள் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பில்லிப்பயறு, காராமணி போன்ற பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகி அதிக மகசூல் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

    வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இயற்கை வளத்தை தக்க வைக்கிறது. பயிர் வறட்சியை தாங்கி வளர உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. ரசாயன தழைச்சத்து, மணிச்சத்து உரங்கள் 25 சதவீதம் குறைவதால் சாகுபடி செலவு குறைகிறது என பயிற்சியளித்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் சதிஸ்குமார் வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், பயிர்க் காப்பீடு திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்கள் குறித்து விளக்கமளித்தனர். இதில் சிலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    அரவேணு :

    கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    கோத்தகிரி தோட்டகலைதுறை மூலம் நடைபெற்ற இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். நீலகிரி தோட்டகலை இயற்கை விவசாய சங்க செயலாளர் ராம்தாஸ் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

    ×