search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழும் நிலையில்"

    • மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது
    • மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.

    ஈரோடு, 

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ஜோசப் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜோசப் தோட்டம் பகுதியில் உயர் மின்னழுத்த லைன் செல்கிறது.

    இங்குள்ள ஒரு உயர் மின் அழுத்த லைனில் உள்ள மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.

    அந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து எந்த நேரமும் விழும் சூழ்நிலையில் உள்ளது.

    மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    • இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், கடந்த 1986-ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தாசப்ப கவுண்டன்புதூர் ஊரக மருந்து கட்டிடம் திறக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தாசப்பகவுண்டன் புதூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் காலியாக இருந்த இந்த ஊரக மருந்து கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஏளூர் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மின்வாரிய அலுவலகத்தில் அரக்கன்கோட்டை, நால்ரோடு வடக்கு மற்றும் தெற்கு, ஜோகியூர், ஏளூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த சுமார் 700 விவசாய மின் இணைப்புகளுடன் குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு என 6 ஆயிரத்து 500 மின் இணைப்புகள் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் தலைமையில் லைன்மேன், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், உதவியாளர், கணக்கீட்டாளர், வருவாய் பிரிவு அலுவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    மின் இணைப்பு பெறுதல், மின் தடை குறித்து புகார் தெரிவிக்க வருதல் என நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரும் இந்த அலுவலகம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடந்து விட்டன.

    இந்நிலையில் தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மழை காலங்களில் அனைத்து அறைகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் நிலையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை தார்பாய் மூலமாக மூடி வைத்தே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த ஒரு கட்டிடம் மட்டும் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் கட்டிடம் காலாவதியாகி விட்டதால் புதுப்பிக்க முடியாது என்றனர்.

    பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த மின் வாரிய அலுவலகத்தை விபத்து ஏற்படும் முன்பே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கன் கோரிக்கை விடுத்தனர்.

    ×