search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power board office"

    • துணை மின் நிலைய மின்வாரிய அலுவலகம் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

    அவினாசி :

    அவிநாசி மின் கோட்டத்துக்கு உள்பட்ட சேவூா் மின்வாரிய அலுவலகம் சேவூரின் நகரப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் துறையினா், 8 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் நுகா்வோா் உள்ளிட்டோா் மின்கட்டணம் செலுத்தவும், இணைப்புக்காக விண்ணப்பிப்பது, புகாா் தெரிவிப்பது ஆகியவற்றை எளிய முறையில் செய்து வந்தனா். ஆனால் சேவூரை அடுத்துள்ள பாப்பாங்குளம் ஊராட்சியில் செயல்படும் சேவூா் துணை மின் நிலையத்துக்கு மின்வாரிய அலுவலகம் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

    இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து தொழில் துறையினா், பொதுமக்கள் கூறியதாவது:- தற்போது இடமாற்றப்படும் அலுவலகம் சேவூரில் இருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாத பகுதியாக உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்தும் பெண்கள் முதல் அனைவரும் மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடும். ஆகவே உடனடியாக மீண்டும் சேவூரின் மையப்பகுதியிலேயே மின்வாரிய அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக, சேவூா் கைகாட்டி பகுதியில் உள்ள கதா் கிராம கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    • இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், கடந்த 1986-ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தாசப்ப கவுண்டன்புதூர் ஊரக மருந்து கட்டிடம் திறக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தாசப்பகவுண்டன் புதூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் காலியாக இருந்த இந்த ஊரக மருந்து கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஏளூர் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மின்வாரிய அலுவலகத்தில் அரக்கன்கோட்டை, நால்ரோடு வடக்கு மற்றும் தெற்கு, ஜோகியூர், ஏளூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த சுமார் 700 விவசாய மின் இணைப்புகளுடன் குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு என 6 ஆயிரத்து 500 மின் இணைப்புகள் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் தலைமையில் லைன்மேன், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், உதவியாளர், கணக்கீட்டாளர், வருவாய் பிரிவு அலுவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    மின் இணைப்பு பெறுதல், மின் தடை குறித்து புகார் தெரிவிக்க வருதல் என நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரும் இந்த அலுவலகம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடந்து விட்டன.

    இந்நிலையில் தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மழை காலங்களில் அனைத்து அறைகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் நிலையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை தார்பாய் மூலமாக மூடி வைத்தே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த ஒரு கட்டிடம் மட்டும் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் கட்டிடம் காலாவதியாகி விட்டதால் புதுப்பிக்க முடியாது என்றனர்.

    பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த மின் வாரிய அலுவலகத்தை விபத்து ஏற்படும் முன்பே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கன் கோரிக்கை விடுத்தனர்.

    பொள்ளாச்சி அருகே மின் வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி துணை மின் நிலைய வளாகத்தில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் விவசாயிகள் தக்கல் முறையில் மின் இணைப்பு பெற காசோலைகளுடன் விண்ணப்பம் அளிக்க வந்து இருந்தனர்.

    சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் 60 விவசாயிகளிடம் மட்டும் விண்ணப்பத்தை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×