search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dilapidated"

    • தூர்ந்துபோன கடைமடை கால்வாய்; 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • 100 ஏக்கர் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கனேந்தல் யூனியன் கண்மாயை நம்பி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    சுமார் 100 ஏக்கரில் நெல், மிளகாய் விவசாயம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் வானம் பார்த்த பூமியான அங்கு மழை பெய்தால் மட்டுமே நரியனேந்தல், அரசனூர் கண்மாயில் இருந்து வடக்குனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து வரும். வடக்கநேந்தல் கண்மாய் 4 கடை மடையை கொண்டது. இந்த மடைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.கட்டிய சில வருடங்களி லேயே மடைகள் அனைத்தும் சேதம் அடைந்து முழுவது மாக இடிந்தது.

    முற்றிலும் மடைகள் தூர்ந்து போனதால் சிறிய துளை கூட இல்லாத அள விற்கு மணல் மூடி உள்ளது.இதனால் கண்மாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 வருடங்க ளாக மாவட்ட கலெக்டர் உள்பட சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் மடைகளை பராமரிப்பு செய்து கொடுக்க கோரி பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    விவசாய காலம் தொடங்குவதற்கு முன்பாக 4 மடையையும் பராமரிப்பு செய்து கொடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியும்.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் மடையை சீரமைக்காததால் இந்த ஆண்டும் விவசாயம் சுமார் 100 ஏக்கர் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர்.
    • இடிந்துவிழும் நிலையில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் உள்ளது.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த தோலி கிராமத்தில் கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிகுழுவினர் பயன்பாட்டுக்காக கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடம் மூலம் அப்பகுதி பெண்கள் பயன்அடைந்து வந்தனர்.

    இந்த கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

    இதன் காரணமாக கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    எந்தநேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று தோலி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை கட்டிடம் இடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்துவிழும் நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை கிழக்கு, வடக்கு தொகுதி மாநகராட்சி 24, 25-வது வார்டுக்கு உட்பட்டது.
    • கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கு குழி ேதாண்டி 18 மாதமாகியும் மூடாத அவலத்தால் சாலை சீரழிந்து உள்ளது.

    மதுரை 

    மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி 24, 25-வது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குலமங்கலம் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். காளவாசல், அரசரடி, ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மகாத்மா காந்திநகர், குலமங்கலம், பனங்காடி உள்பட பல பகுதிகளுக்கு செல்பவர்களின் பிரதானமாக விளங்குவது இந்த குலமங்கலம் சாலையாகும்.

    வருமான வரித்துறை அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்துள்ள இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக இந்த சாலை தோண்டப்பட்டு தற்போது வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 18 மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணியால் இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

    மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் இருந்து பறக்கும் புழுதியும், தூசியும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு, வாகனங்களில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும் நிலையையும் ஏற்படுத்துகிறது. பகலில் இந்த நிலைமை என்றால், இரவினில் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    மழை காலங்களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சேரும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்தும், வாகனங்க ளிலும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. முதி யோர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இருசக்கர வாக னத்தில் அமர்ந்து சென்றால் நிலைமை விபரீதமாகும் அளவிற்கு இந்த சாலைகள் படுமோசமாக உள்ளது. இது குறித்து ஆட்டோ டிரைவர் ஜெயபாண்டி கூறியதாவது:-

    நான் இந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த இரண்டு வருடங்க ளாக இந்த சாலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்தச் சாலையில் வண்டி ஓட்டுவதால் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிவிடு கிறது. வாகனத்தின் எஞ்சினிலும் பழுது ஏற்படுவதால் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டு வதற்கு பெரும் பாலான ஆட்டோ டிரைவர்கள் அஞ்சும் நிலை உள்ளது என்றார். ஒரு சில சமயங்களில் சவாரிகளை புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட தவறியதில்லை என்றார்.

    இது குறித்து 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாணிக்கம் (அ.தி.மு.க.) தெரிவித்ததாவது:-

    வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் அமைப்ப தற்கு முதன்முதலில் சாலைகள் தோண்டப்பட்டது. அதன் பிறகு வீடுகளுக்கு இணைப்பு குழாய் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டது. தற்போது ரூ.5 கோடி மதிப்பில் செல்லூர் கண்மாய் கரையை அகலப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 மாத காலங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    இப்பகுதியில் கடை வைத்துள்ள ரஷீத் அலி, செந்தில் கூறியதாவது:-

    சாலைகளை சமப்படுத்தாமல் ஜல்லிக் கற்களை மட்டும் கொட்டி வைத்துள்ளனர். இதிலிருந்து பறக்கும் தூசிகளால் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் தூசி படர்ந்து கரையாகி விடுகிறது. இதனால் பொருட்களை விற்கமுடியவில்லை. இதனால் மிகப்பெரிய பொருள் இழப்பு மற்றும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் செல்லும் மாணவ, மாணவிகளின் சைக்கிள் சாலையில் கொட்டிக்கிடக்கும் கற்களால் டயர் பஞ்சராகி உருட்டி செல்வதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

    25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் (தி.மு.க.) கூறியதாவது:-

    வைகை கூட்டுக்குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக சாலையின் மையப்பகு–தியில் தோண்டப்பட்டதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் கோரிக்கை வைத்திருக்கி றேன். அவர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களின் நலன்கருதி மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை சீரமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என்றும், பொதுமக்களின் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெறுவதால் அதனால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தக்கூடிய செல்லூர் குலமங்கலம் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    • இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், கடந்த 1986-ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தாசப்ப கவுண்டன்புதூர் ஊரக மருந்து கட்டிடம் திறக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தாசப்பகவுண்டன் புதூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் காலியாக இருந்த இந்த ஊரக மருந்து கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஏளூர் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மின்வாரிய அலுவலகத்தில் அரக்கன்கோட்டை, நால்ரோடு வடக்கு மற்றும் தெற்கு, ஜோகியூர், ஏளூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த சுமார் 700 விவசாய மின் இணைப்புகளுடன் குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு என 6 ஆயிரத்து 500 மின் இணைப்புகள் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் தலைமையில் லைன்மேன், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், உதவியாளர், கணக்கீட்டாளர், வருவாய் பிரிவு அலுவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    மின் இணைப்பு பெறுதல், மின் தடை குறித்து புகார் தெரிவிக்க வருதல் என நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரும் இந்த அலுவலகம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடந்து விட்டன.

    இந்நிலையில் தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மழை காலங்களில் அனைத்து அறைகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் நிலையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை தார்பாய் மூலமாக மூடி வைத்தே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த ஒரு கட்டிடம் மட்டும் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் கட்டிடம் காலாவதியாகி விட்டதால் புதுப்பிக்க முடியாது என்றனர்.

    பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த மின் வாரிய அலுவலகத்தை விபத்து ஏற்படும் முன்பே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கன் கோரிக்கை விடுத்தனர்.

    ×