search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விர்ச்சுவல் ரியாலிட்டி"

    ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த சாதனத்தின் உற்பத்தி பணிகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் காப்புரிமைகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்சசுவல் ரியாலிட்டி சாதனம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. ஆப்பிளின் ஏ.ஆர். கண்ணாடிகள் கம்ப்யூட்டிங், ரென்டரிங், இண்டர்நெட் கனெக்டிவிட்டி மற்றும் லொகேஷன் சேவைளை பயனர் ஐபோனில் இருந்து டிஸ்ப்ளே செய்யும் என மிங் சி கியோ தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், ஆப்பிளின் ஏ.ஆர். சார்ந்த ஹெட்செட் ஐபோனுடன் இணைந்து பயனர்களுக்கு கம்ப்யூட்டர் புகைப்படங்களை நிஜ உலகின் மேல் பிரதிபலிக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஹெட்செட் ஆப்பிள் உருவாக்கும் பிரத்யேக சிப் கொண்ட மற்ற சாதனத்துடன் வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.



    இதுதவிர ஹெட்செட்டில் டச்-சென்சிட்டிவ் பகுதி இடம்பெற செய்ய ஆப்பிள் விரும்புவதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் சூழலுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் வெற்றி பெறச் செய்வதில் ஆப்பிள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    புதிய ஏ.ஆர். ஹெட்செட்களின் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவுறும் பட்சத்தில் இந்த சாதனம் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஹாலோ லென்ஸ் 2 எனும் சாதனத்தை அறிமுகம் செய்தது.

    இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாண்டு பழைய சாதனத்தின் மேம்பட்ட புதுய வெர்ஷன் ஆகும். இந்த சாதனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 3500 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக் தளத்தின் நியூஸ் ஃபீடில் வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் புதுவிதமாக போஸ்ட் பதிவிட வழி செய்துள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.

    பயனர்கள் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம்.

    நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும். எனினும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் 360 தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும்.



    புகைப்படத்தை போர்டிரெயிட் மோடில் எடுத்து, அதனை 3டி போட்டோவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும். இனி படத்தை ஸ்கிரால், பேன் அல்லது டில்ட் செய்து படத்தை உண்மையான 3டி-யில் பார்க்க முடியும். ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ்-இல் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்கலாம். 

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த கருத்துக்களை பயனரிடம் கேட்டறிந்து வருகிறோம், தொடர்ந்து இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கி வருகிறோம் என ஃபேஸ்புக் 360 பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த அம்சம் மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது.
    ×