search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுகள் வழங்கும் விழா"

    • 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 351 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
    • இந்த விழாவிற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2022-23ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து கிழக்கு மாவட்ட அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 351 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். கட்சி பிரமுகர் அன்பரசன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதாநவாப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கிருபாகரன், செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், அஸ்லம், சித்ரா சந்திரசேகர், கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பங்கேற்று, கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 351 மாணவர்களுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழகளை வழங்கியதுடன், மீண்டும் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பைகளை வழங்கி, வாழ்த்தி பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க. தகவல் தெழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் பத்மபிரியா ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாநில செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராசன் நன்றி கூறினார்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.
    • முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2022-23ம் கல்வியாண்டில் படிப்பு, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறையை சேர்ந்த சிவபிரகாஷ், யுகேபிஎம்.கார்த்திக், சென்னியப்பன், பூபதி, ரமேஷ்குமார், விசித்ரா செந்தில்குமார், மாரிமுத்து கலந்து கொண்டனர்.

    பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணை ப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×