search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரதம் தொடங்கினர்"

    • கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
    • ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கோபி:

    கேரள மாநிலம் சபரி மலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விள க்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலை க்கு சென்று ஐயனை தரி சனம் செய்வார்கள்.

    இதை யொட்டி தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ங்களில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் ஐயப்பன் கோவில், கோபி ஐயப்பன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமார சாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோ வில் மற்றும் சுற்று வட்டார கோவில்களில் இன்று அதி காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று காலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இவர்கள் துளசி மணி அல்லது ருத்ராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் கொண்டதாக வாங்கி அவ ற்றுடன் அய்யப்பன் திருவுரு வப்படத்தை இணைத்து அணிந்து கொண்டனர். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொண்டனர்.

    இதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில் மாலை அணிந்து கொள்வார்கள். சன்னிதானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்பாக குறை ந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கு ம்படி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர்.

    ஐயப்ப பக்தர்கள் தின மும் இரு வேலைகளில் குளித்து அய்யப்பன் திரு வுருவப்படத்தை வணங்கி தினமும் ஆலய வழிபாடு மற்றும் பஜனைகளில் கலந்து கொண்டு ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் எங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

    கோவை,

    தமிழ் மாதங்களில் முக்கிய மாதங்களில் ஒன்றாக கார்த்திகை மாதம் இன்று தொடங்கியது. இந்த நாளில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.

    அதேபோல் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதையொட்டி இன்று அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    கோவை சித்தாபுதூரில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் இன்று காலையே பக்தர்கள் திரண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மாலையும் அணியும் பக்தர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்ததால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மண்டல பூஜை விழாவும் இன்று தொடங்கியது. இன்று முதல் 12-ந் தேதி வரை ஆலயத்தின் தந்திரி பிரம்மஸ்ரீ சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சனி தோஷ சாந்தி ஜெபமும் நடத்தப்படுகிறது.

    அடுத்த மாதம் 13-ந்தேதி அய்யப்ப சாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி அகண்ட நாம பஜனையும், 18 -ந் தேதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பொது மக்களும் பங்குபெறும் அன்னதானம் நடைபெற உள்ளது.

    இதேபோல கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அய்யப்பன் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் குவிந்து மாலை அணிந்தனர்.

    இதனால் சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் எங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இன்று முதல் மகர விளக்கு பூஜை முடியும் வரை பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து சபரிமலை செல்வதை காணலாம்.

    ×