search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசா ரணை"

    • வீராசாமி கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருந்தார்.
    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 46). இவர் வலசை கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேப்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வந்து பணியை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். 

    அப்போது மோட்டார் சைக்கிள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீராசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசா யிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது நாட்டுத் துப்பாக்கிகளால் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர்
    • ஒருவர் துப்பாக்கியால் வேட்டையாடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் காப்பு க்காடு பகுதியை சுற்றி ஏராளமான விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விளையக் கூடிய பயிர்களை பாதுகா ப்பதற்காக விவசா யிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது நாட்டுத் துப்பாக்கிகளால் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர்     இதனை தடுப்பதற்காக டி.எஸ்.பி மகேஷ், எலவனாசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் திரு மால் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் காலை குஞ்சரம் காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது குஞ்சரம் காப்புக்காடு அருகே ஒரு வயல்வெளியில் துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்  இந்நிலையில் அங்கு வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 மயில்களை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் வேட்டையாடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எறையூர் பாளையத்தை சேர்ந்த பவுல் அமல்ராஜ் (வயது 21) என்பது தெரிய வந்தது. மேலும் மான் வேட்டைக்கு சென்ற அமல்ராஜ் மயிலை வேட்டையாடியதும் விசா ரணையில் தெரியவந்தது. உடனே பவுல் அமல்ராஜை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வேட்டையாட சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×