search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் ஏலம்"

    • வருகிற 5-ந் தேதி நடக்கிறது
    • முன்வைப்பு தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் கழிவு செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது. ஏலம் வருகிற 5-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

    ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் வாகனத்திற்கான முன்வைப்பு தொகையாக ரூ.6,500 "Information and Public Relations Officer, Vellore" பெயரில் வங்கி வரை வோலை மற்றும் உரிய புகைப்பட அத்தாட்சி நகலுடன் வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கும் ஏலதாரர் ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.

    அதன்பின்னர், ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். கூடுதலாக ஏலம் கேட்டு வாகனத்தினை பெற்று க்கொண்ட எலதாரரை தவிர மற்ற ஏலதாரர்களுக்கு அவர்கள் முன் வைப்பு த்தொகை திரும்ப வழங்கப்படும் என கலெ க்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    பொன்னேரி:

    ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில், விபத்து, திருட்டு, கேட்பாரற்று கிடந்த வாகனம், மது போதையில் வாகனம் பறிமுதல், உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பை பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் வெளியிட்டார். அதன்படி பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னிலையில் கடந்த 3 நாட்களாக வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    ×