search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவரம் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ரூ.45 லட்சத்துக்கு எலம் விடப்பட்டன
    X

    சோழவரம் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ரூ.45 லட்சத்துக்கு எலம் விடப்பட்டன

    • பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    பொன்னேரி:

    ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில், விபத்து, திருட்டு, கேட்பாரற்று கிடந்த வாகனம், மது போதையில் வாகனம் பறிமுதல், உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பை பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் வெளியிட்டார். அதன்படி பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னிலையில் கடந்த 3 நாட்களாக வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    Next Story
    ×