search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாட்டு"

    • நாகப்பட்டினம் சிவன் கோவில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும்.
    • ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது.

    அம்மனுக்கு வளைகாப்பு:

    ஆடிப்பூர தினத்தில் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பாள்.

    அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

    அம்பிகைக்கு வளைகாப்பு:

    மனம்போல் மாங்கல்ய பாக்கியமும், பேர் சொல்ல பிள்ளை வரமும் பெற்றுத் தரும் திருநாள்தான் ஆடிப்பூரம். அன்று அம்பிகை பூப்பெய்தினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு படைக்கப்படும் வளையல்களை வாங்கி அணிந்தால் நினைத்த பிரார்த்தனை நிறைவேறும்.

    ஆண்டாளுக்கு கள்ளழகரின் பரிசு:

    ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். அந்த தேரோட்டத்தின் போது, மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து அனுப்பப்படும் பட்டுப் புடவையையே ஆண்டாளுக்கு அணிவிப்பார்கள். திருமணத் தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.

    தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...:

    ஆடித்திருவிழாவின் 7-ம் நாளான இரவு ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.

    கன்னிப் பெண்களுக்கு தாம்பூலம்:

    நாகப்பட்டினம் சிவன் கோவில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும். இங்கு கோவில் கொண்டுள்ள நீலாயதாட்சி அம்மன் கன்னி தெய்வமாக அருள்பாலிக்கிறாள். அன்று 9 கன்னிப் பெண்களை அழைத்து வந்து அமர்த்தி, தாம்பூலத்துடன் சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி, வளையல், ரவிக்கைத் துணி போன்றவற்றைக் கொடுத்து, மஞ்சள் கயிறும் கொடுப்பார்கள்.

    மஞ்சள் கயிறு பிரசாதம்:

    ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

    சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சிலைக்கு அணிவிக்கப்படும் மாலையை வாங்கி பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள்.

    தொடர்ந்து கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

    • வாழப்பாடி அருகே பழங்காலத்தில் மார்கழியில், சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு.
    • ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு,‌ பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க பேளூர், பழங்காலத்தில் வேள்வியூர் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிகத் தலமாக விளங்கியது. பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத் தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவிலும், தென் கரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், வைணவ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

    இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழியில், இப்பகுதி சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று, வழிபாடு நடத்துவதும் பல ஆண்டுகளாக மரபு மாறாமல் நடந்து வருகிறது.

    நூறாண்டுக்கு மோலாக தொடர்ந்து வரும் சிறுவர்களின் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து வரவேற்று, சிறுவர்–சிறுமியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வழிபடுவர்.

    பேளூரில், நிகழ்வாண்டு நடுங்கும் குளிரிலும், அதி காலையில் விழித்தெழுந்த சிறுவர்–சிறுமியர், மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு,‌ பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.

    ×