search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ப்பு குறித்த"

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முகாசி அனுமன் பள்ளி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி கிருபாகரன் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் மற்றும்

    தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தும் நோய்கள் குறித்தும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு துறையின் திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

    தொழில்நுட்ப மேலாளர்கள் விஜயகுமார், மஞ்சுரேகா, நவீன பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.

    ×