search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் இந்தியா தொடர்"

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்கள் அடித்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

    மிர்புர்: 

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஷேகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தார். தாக்குப் பிடித்து விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். 


    இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஹூசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்களாதேசம் அடுத்ததாக விளையாடுகிறது.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்கிறது.

    நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாக்கா மைதானம் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மைதானங்களை போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டது.
    • குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இங்குள்ள பிட்ச் நன்கு சுழன்று ஸ்பின்னர்களுக்கு அதிகம் கை கொடுக்கும்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்திய அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது. அந்த பயணத்தில் டி20 உலக கோப்பைக் கோப்பைக்கு பின் நியூசிலாந்தில் விளையாடிய இந்தியா டி20 தொடரை வென்றாலும் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும் அத்தொடரில் இல்லாத கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி அடுத்ததாக பக்கத்தில் இருக்கும் வங்கதேசத்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. என்ன தான் சமீப காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறினாலும் சொந்த மண்ணில் எப்போதுமே சவாலை கொடுக்கும் வங்கதேசம் இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராட உள்ளது.

    குறிப்பாக கடைசியாக கடந்த 2015இல் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு 2 -1 (3) என்ற கணக்கில் வென்ற வங்கதேசம் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த மலரும் நினைவுகளுடன் இத்தொடரில் அந்த அணி விளையாடுகிறது. மறுபுறம் 2007 உலக கோப்பை தோல்வி உட்பட வரலாற்றில் சந்தித்த தோல்விகளை மனதில் வைத்து சிறப்பாக செயல்பட காத்திருக்கும் இந்தியா இம்முறை வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2023 உலகக்கோப்பைக்கு தேவையான பயிற்சிகளை எடுக்க உள்ளது.

    இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தாக்கா நகரில் இருக்கும் ஷேர்-ஈ-பங்ளா மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2006இல் தோற்றுவிக்கப்பட்டு 25,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 13 ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 3 போட்டிகளில் வங்கதேசம் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (786) குவித்த இந்திய வீரராகவும் அதிக சதங்கள் (4) அடித்த இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் (183) பதிவு செய்த இந்திய வீரராகவும் விராட் கோலி திகழ்கிறார்.

    இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் (17 விக்கெட்கள்) உள்ளார். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள இந்திய பவுலர் : இர்பான் பதான் – 4/32. வெதர் ரிப்போர்ட்: சமீபத்திய உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மழையால் நிறைய போட்டிகள் ரத்தானதால் வீரர்களும் ரசிகர்களும் மிகவும் கடுப்பானார்கள். ஆனால் இப்போட்டி நடைபெறும் தாக்கா நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு கொஞ்சமும் கிடையாது. குறிப்பாக மேகமூட்டம் கூட இல்லாமல் தெளிவான வானிலை நிலவும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

    இப்போட்டி நடைபெறும் தாக்கா மைதானம் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மைதானங்களை போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டது. அதாவது இங்கு வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாது என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் பழைய பந்தில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை கடைபிடித்தால் மட்டுமே கட்டுக்கோப்பாக செயல்பட முடியும். சொல்லப்போனால் புதிய பதில் கூட இங்குள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் கை கொடுக்காது.

    அதே சமயம் போட்டி நடக்க நடக்க ஸ்பின்னர்கள் அதிக ஆதிகத்தை செலுத்துவார்கள். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இங்குள்ள பிட்ச் நன்கு சுழன்று ஸ்பின்னர்களுக்கு அதிகம் கை கொடுக்கும். அதனால் புதிய பந்துகளையும் ஸ்பின்னர்களையும் எதிர்கொள்ள தெரிந்த பேட்ஸ்மேன்கள் இம்மைதானத்தில் பெரிய ரன்களை குவிப்பார்கள். அதை விட இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 263 ஆகும். சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 185 ஆகும். அதாவது இம்மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதை விட சேசிங் செய்வது மிகவும் கடினமாகும். அதனாலேயே கடைசி 3 போட்டிகளில் இங்கு முதலில் பந்து வீசிய அணிகள் தோல்வியை சந்தித்தன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து 250 – 300 ரன்களை எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

    • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×