search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு சோதனை"

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
    • தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள், இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படவில்லை.

    அதேபோல் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கும், இந்த ரெய்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்து வருகின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன. அதை தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மீதமுள்ள ஐந்து பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

    அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சேர நாடு, பாண்டியநாடு என பெயரிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிகார பலத்தை வைத்து அவர்கள் எத்தனை நாடாக வேண்டுமானாலும் பிரிக்கலாம், ஆனால் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து கூட அவர்களால் பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×