search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர் காமராஜ்"

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

    சென்னை:

    பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக முறைகேடு புகார் எழுந்தது.

    இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

    • முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தியது.
    • கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015- ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக காமராஜ் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதினார்கள்.

    முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் 963 சவரன் நகை, 23.96 கிலோ வெள்ளி, ரூ.41.06 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டன

    மேலும், கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள பிளாசம் ஓட்டலிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பரான இளமுருகு என்பவர் இந்த ஓட்டலை நடத்தி வருகிறார்.

    திருச்சி கே.கே.நகர் ஐயர் தோட்டம், 2-வது மெயின் ரோடு, 3-வது கிராஸ் பகுதியில் உள்ள காமராஜின் நண்பர் பாண்டியன் (53) என்பவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஆறு பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    தொழிலதிபரான பாண்டியன் பூதலூரில் அரிசி ஆலை, திருச்சி மாத்தூரில் இன்டஸ்ட்ரீஸ் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள பிளாசம் ஓட்டலிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பரான இளமுருகு என்பவர் இந்த ஓட்டலை நடத்தி வருகிறார். அதிரடியாக ஓட்டலில் நுழைந்த போலீசார் அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, சோதனையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் ராமச்சந்திரா நகர் பகுதியில் உள்ள இளமுருகு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் மொத்தம் 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மன்னார்குடி பகுதி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அவர்கள் காமராஜ் வீடு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    மன்னார்குடி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பல அமைச்சர்கள் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் திரட்டினார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் சில அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்திருப்பதாக தெரியவந்தது. அதன்பேரில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர்களின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதனடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015- ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக காமராஜ் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதினார்கள்.

    முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டு உள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

    மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 1.4.2015 முதல் 31.3.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரியவந்தது.

    இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப்பிரிவுகள் 120(பி) ஐ.பி.சி., 13(2), 13(1) (இ), 13(2), 13(1) (இ), 109 ஐ.பி.சி., 13(2), 13(1) (பி), 12, 13(2), 13(1) (பி) 2018-ன்படி காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், டாக்டர் எம்.கே.இனியன், டாக்டர் கே.இன்பன், ஆர்.சந்திரசேகரன், பி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் எஸ்.உதய குமார் ஆகியோர் மீது நேற்று (7-ந்தேதி) வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் மூலமாகவும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சந்தேகம் வந்த போது இது தொடர்பாக அவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வந்தனர்.

    இந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. அவரது நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தஞ்சை, திருச்சி, கோவை, சென்னை உள்பட மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இது அ.தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளும் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மன்னார்குடி பகுதி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் காமராஜ் வீடு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
    • தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள், இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படவில்லை.

    அதேபோல் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கும், இந்த ரெய்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்து வருகின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன. அதை தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மீதமுள்ள ஐந்து பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

    அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சேர நாடு, பாண்டியநாடு என பெயரிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிகார பலத்தை வைத்து அவர்கள் எத்தனை நாடாக வேண்டுமானாலும் பிரிக்கலாம், ஆனால் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து கூட அவர்களால் பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடையாறு சாஸ்திரி நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள முத்துலட்சுமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
    • மயிலாப்பூர்-ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஜி.பி.ஏ. கட்டுமான நிறுவனத்திலும், போயஸ் கார்டன் பகுதியில் ஜெயா டி.வி. அலுவலகத்தின் அருகில் உள்ள பி.எஸ்.கே. கட்டுமான நிறுவன அதிபர் அருண் குமார் இல்லத்திலும் சோதனை நடந்துள்ளது.

    முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர் பாண்டியன் சாலையில் உள்ள ஆர்.கே.இன்டர்நேஷனல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலையில் இருந்தே சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அடையாறு சாஸ்திரி நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள முத்துலட்சுமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    மயிலாப்பூர்-ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஜி.பி.ஏ. கட்டுமான நிறுவனத்திலும், போயஸ் கார்டன் பகுதியில் ஜெயா டி.வி. அலுவலகத்தின் அருகில் உள்ள பி.எஸ்.கே. கட்டுமான நிறுவன அதிபர் அருண் குமார் இல்லத்திலும் சோதனை நடந்துள்ளது.

    சென்னை அண்ணாநகர் மேற்கில் எச்.பிளாக் பகுதியில் அமைந்துள்ள "எனர்ஜி சொலுசன் பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தின் தேசபந்து இல்லத்திலும், பனையூர் மாடர்ன் பில்டர்ஸ் லே-அவுட்டில் உள்ள முத்து லட்சுமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க. அரசு.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க. அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்து வது கண்டிக்கத்தக்கது.

    அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.
    • அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    திருவாரூர் :

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

    முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    2015 முதல் 2021-ம் ஆண்டு வரை அமைச்சர் பதவியில் இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    ×