search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டோரம்"

    • திடீரென பஸ் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
    • இதில் பஸ் சேதமடைந்து முன் பக்க கண்ணாடி உடைந்து நொருங்கியது.

    பெருந்துறை:

    கோவையில் இருந்து நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் 36 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ஆம்னி பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பவானி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென பஸ் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் சேதமடைந்து முன் பக்க கண்ணாடி உடை ந்து நொருங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர்.

    இதில் பஸ்சில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த பரமேஸ்வரன் (37), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ மாணிக்கம் (52), திரு வண்ணாமலையை சேர்ந்த தீபன் (28), கோவையை சேர்ந்த குமரேசன் (51), கிருஷ்ணகிரியை சேர்ந்த உதயகுமார் (37), கோவையை சேர்ந்த ஸ்ரீ வீரகாஷினி (23), நந்தினி (36), சுகனேஸ்வரி (44), சந்திப் (10), ராஜலட்சுமி (74), சாய் கிருஷ்ணா (23), கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேஷ் (35) என 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த வர்கள் மீட்கப்பட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
    • வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

    திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.

    வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    ×