search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயின்போ"

    • நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
    • தற்போது ராஷ்மிகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், இந்தியில் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.


    ராஷ்மிகா மந்தனா 

    ராஷ்மிகா மந்தனா 

    இந்நிலையில் ராஷ்மிகா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கவிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'ரெயின்போ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


    ரெயின்போ

    ரெயின்போ

    இப்படத்தின் கதாநாயகனாக சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது.

       பல்லடம் :

    பல்லடத்தில் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை புரிந்த மருத்துவம், காவல்,தீயணைப்பு, பத்திரிக்கை துறையினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன்,ரெயின்போ ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தங்கலட்சுமி நடராஜன், கவிதா சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    ×