என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமேசுவரம்"
- தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்
ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
- ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
ராமேசுவரம்
ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இதேபோல் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்ைத சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்தனர்.எல்லை தாண்டி மீன்பிடித்த தாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட 6 மீன வர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை கடற்படையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்ைக கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும்,
இலங்கை கடற்படை தாக்குதலில் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
- ராமேசுவரம் - செகந்திராபாத் ரெயில் சேவை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மதுரை
ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதன் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ராமேசுவரத்தில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில், சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.
மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 2, 9, 16 ஆகிய நாட்களில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
- ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் 27-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நின்று செல்லும்.
மதுரை
மதுரை- ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் ராமேசுவரம்- கன்னியாகுமரி இடையே வருகிற 27-ந் தேதி முதல் மீண்டும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இது ராமேசுவரத்தில் இருந்து திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் இயக்கப்பட உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராமநாதபுரம் (9.54 மணி) பரமக்குடி (10.19) மானாமதுரை (10.48), மதுரை (11.45), விருதுநகர் (நள்ளிரவு 12.23), நெல்லை (அதிகாலை 2.22), நாகர்கோவில் (3.32) வழியாக கன்னியாகுமரிக்கு 4.15 மணிக்கு செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து நள்ளிரவு 10.15 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் (10.27), வள்ளியூர் (11.01), நெல்லை (11.52), விருதுநகர் (அதிகாலை 1.28), மதுரை (2.25), மானாமதுரை (3.13), ராமநாதபுரம் (3.58) வழியாக ராமேசுவரத்துக்கு அதிகாலை 5.38 மணிக்கு செல்லும். ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் வருகிற 27-ந் தேதி முதலும், கன்னியா குமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் வருகிற 28-ந் தேதி முதலும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்