search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி சுட்டுக்கொலை"

    • மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன.
    • 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடி. மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குர்பான் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குர்பானை பிடிக்க உத்தரபிரதேச போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குர்பான் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் உத்தரபிரதேச போலீசார் அறிவித்து இருந்தனர். இதுபோல சுல்தான்பூர் போலீசாரும் குர்பான் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் கவுசாம்பி மாவட்டம் மஞ்சன்பூர் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலை அருகே குர்பான் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அதிரடி படை போலீசார், மஞ்சன்பூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவுடி குர்பானை போலீசார் கண்டுபிடித்தனர். அவனை சரணடையும்படி போலீசார் கூறினர். ஆனால், அவன் சரணடைய மறுத்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி குர்பான் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தான். அவனை மீட்ட போலீசார், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கவுசாம்பி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-

    கவுசாம்பி மஞ்சன்பூரில் ரவுடி ஒருவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த ரவுடி போலீசாரை நோக்கி சுட்டான். போலீசாரும் திருப்பி சுட்டதில் அவன் மயங்கி விழுந்தான். போலீசார் அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்தியதில் அந்த ரவுடி இறந்திருப்பது தெரியவந்தது.

    இறந்த ரவுடி யார்? என விசாரித்த போது, அவன் போலீசார் தேடிய குர்பான் என தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு அவர்கள் ரவுடிகளை வேட்டையாடி வருகிறார்கள்.

    மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில் 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று குர்பான் என்ற ரவுடியும் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

    • 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர்.
    • கடந்த 12-ந் தேதி 4 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார்.

    கோவை,

    கோவை ஆவாரம்பா ளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கடந்த 12-ந் தேதி 4 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.

    இந்த முன் விரோதத்தில் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்திய பாண்டியை தீர்த்து கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சஞ்சய், அவரது கூட்டாளிகளான காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே சம்பவம் கோவையில் நடைபெற்றதால் இந்த வழக்கு கோவை கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

    மேலும் சரண் அடைந்தவர்களை கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது.

    அதன்படி சஞ்சய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் கோவை தனிப்படை போலீசார் வேலூர் சென்று, பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்களை கோவை மத்திய ஜெயலில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரேஸ்கோர்ஸ் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.3 கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை நாளை வர உள்ளது.விசாரணையின் போது, கைதான சஞ்சய் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.விசாரணையில் முடிவில் அவர்களுக்கு காவல் வழங்கப்படும் என தெரிகிறது. அதன்பின்னர் அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ×