search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து செய்ய வேண்டும்"

    • வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கிராம பொதுமக்கள் வேதனை
    • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் மனு

    ஆரணி:

    ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்து ஊராட்சிக்குட்பட்ட விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் புதியதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    இந்த கல்குவாரி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் கிராம பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது சம்பந்தமாக முள்ளண்டிரம் கிராம பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவில்லை திடீரென கல்குவாரி அமைக்க பட்டுள்ளதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கிராம மக்கள் ஆரணி டவுன் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகிய அலுவலகத்தில் கல்குவாரி தடை செய்ய கோரி மனு அளித்தனர்.

    பின்னர் ஆரணி அதிமுக எம்.எல்.ஏ அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமானசேவூர் ராமசந்திரனிடம் புதியதாக அமைக்கப்பட்ட கல்குவாரியை ரத்து செய்ய கோரி மனுக்கள் அளித்தனர்.

    இது சம்பந்தமாக கலெக்டரிடம் பரிந்துரை செய்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுப்பதாக சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.

    • மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் இதர சுகாதார ஆய்வாளர்களின் நீலகிரி மாவட்ட கூட்டமைப்புக்கான தேர்தல், ஊட்டியில் நடந்தது. இதில் தேர்தல் அலுவலராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வேணுகோபால் பணியாற்றினார். ேதர்தலில் தலைவராக கே.டி.மூர்த்தி, செயலாளராக பி.குமாரசாமி, பொருளாளராக ஏ.கார்த்திக், துணைத்தலைவராக ஆர்.சங்கரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த கிரேடு-2 நிலையில் உள்ள சுகாதார ஆய்வாளர்களை கிரேடு-1 ஆக பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளை தயார் செய்து அனுப்ப எழுதுபொருள் மற்றும் இதர கட்டணமாக மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.
    • தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது.

    ஈரோடு:

    சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட சீட் பண்ட்ஸ் சங்கத்தினர் ஜி.எஸ்.டி. துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமசாமி, செயலாளர் சண்முகம் ஆகியோர் ஈரோடு ஜி.எஸ்.டி. துணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 2,600 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.

    இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

    இந்த ஜி.எஸ்.டி. உயர்வு வரும் 18-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. உயர்வால் இந்த வரிக்கான தொகையை சீட்டு போடும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு வழங்க மறுக்கின்றனர்.

    இந்த ஜி.எஸ்.டி. காரண மாக ஏற்கனவே முறையற்ற மற்றும் அங்கீகாரம் பெறாமல் பல இடங்களில் சீட்டு நடத்தப்படுகிறது. இதனால் அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு இந்த வருவாய் பாதிக்கப்படும்.

    வங்கிகள் வசூலிக்கும் வட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதில்லை. அதே போன்ற சேவையை தான் சிட்பண்ட்ஸ் நிறுவன ங்களும் வழங்குகின்றன.

    மேலும் சீட்டு பிடிக்கும் வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாத நிலையில் எங்களை போன்ற சிறிய சிட்பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசு இதனை கவனத்தில் கொண்டு சிட்பண்ட்ஸ் நிறு வனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை முழு மையாக ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×