search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சன்குமார்"

    • புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார்.
    • நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

    சென்னை:

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் எம்.பி. ரஞ்சன்குமார். இவர் தமிழ்நாடு எஸ்.சி. பிரிவு மாநில துணை தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

    2 பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத நிலையில் அவர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அக்கடிதத்தை அவர் ஏற்கவில்லை.

    தற்போது புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார்.

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக 6 மாவட்டங்களில் புதிதாக நிர்வாகிகளை நியமித்தார்.

    நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

    மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் கிழக்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கு புதிதாக பொறுப்புக்குழு உறுப்பினர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார்.

    இந்த நிலையில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட சர்க்கிள், வட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சிகரமான பதிலை அளித்துள்ளார்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் பா. ஜனதா அரசு பொறுப்பேற்றது முதலே எஸ்சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்ட விழ்த்துவிடப்பட்டு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு எதிராக வன்முறையை கட்ட விழ்த்து விட்ட ஆட்சியாளர்கள், இந்த சமுதாயத்தைச்சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழடிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழ கங்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற எஸ்சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 13 ஆயிரத்து 626 பேர் சாதிய பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் வெளியேறியதாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்போது மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சிகரமான பதிலை அளித்துள்ளார். சாதிய பாகுபாடு காரணமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி பயில முடியாமல் வெளியேறுவதாக அமைச்சரே சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

    மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் வகையில், எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது.

    இட ஒதுக்கீட்டுப் பயனால் இப்போதுதான் படிப்படியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி வருகிறார்கள். இந்த சூழலில் முதுகலைப் படிப்பு வரை படிக்க முடியாத சூழலை பா.ஜ.க. அரசே ஏற்படுத்துகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த அராஜக செயலை கண்டித்து கோவையில் 18-ந்தேதி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×