search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரக்சா பந்தன்"

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.
    • விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சங்கராபுரம் மண்டலம் கட்சி பிடி பகுதியை சேர்ந்தவர் காபு மணி (வயது 29). இவருக்கு வரலட்சுமி என்ற அக்காவும், சிவைய்யா என்கிற அண்ணன் மற்றும் தம்பி ராஜா உள்ளனர்.

    இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.

    விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து காபு மணிக்கு 7 அடி உயரத்தில் உலோக சிலை வடித்தனர். ரக்சா பந்தன் விழாவையொட்டி அவரது அக்கா வரலட்சுமி, அண்ணன் சிவைய்யா மற்றும் தம்பி ராஜா ஆகியோர் காபுமணி உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அப்போது அவர்கள் தன்னுடைய தங்கை பைக் விபத்தில் இறந்து விட்டதால் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    பின்னர் காபுமணி சிலையை தங்களது வீட்டிற்கு முன்பாக பிரதிஷ்டை செய்தனர்.

    தங்கை மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுடன் பிரதமர் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்.
    • பெண்களும், குழந்தைகளும் பிரதமர் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

    புதுடெல்லி:

    சகோதரி, சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார்.

    துப்புரவு பணியாளர்கள், பியூன்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் உள்பட பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுடன் இந்த சிறப்பு ரக்‌ஷா பந்தனை பிரதமர் கொண்டாடினார். குழந்தைகள் பிரதமர் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரிடம் ஆசி பெற்றனர்.

    பிரதமருக்கு சிறுமிகள் ராக்கி கட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

    ×