search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
    X

    குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

    • பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுடன் பிரதமர் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்.
    • பெண்களும், குழந்தைகளும் பிரதமர் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

    புதுடெல்லி:

    சகோதரி, சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார்.

    துப்புரவு பணியாளர்கள், பியூன்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் உள்பட பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுடன் இந்த சிறப்பு ரக்‌ஷா பந்தனை பிரதமர் கொண்டாடினார். குழந்தைகள் பிரதமர் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரிடம் ஆசி பெற்றனர்.

    பிரதமருக்கு சிறுமிகள் ராக்கி கட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×