search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகசிய தகவல்"

    • கல்லானத்தம் கிராமத்தில் சாராயம் விற்று வரு வதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பதிவு இல்லா இருசக்கர வாகனமும் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப் சாராயத்தை கைப்பற்றியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கல்லானத்தம் கிராமத்தில் சாராயம் விற்று வரு வதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீ ஸ்சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    கல்லாநத்தம் கிராம த்தில் நாச்சியப்பன் கோவில் பின்புறம் உள்ள ஓடையில் சாராயம் விற்பனை செய்த வந்த ராமச்சந்திரன் மற்றும் அருளை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பதிவு இல்லா இருசக்கர வாகனமும் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப் சாராயத்தை கைப்பற்றி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பனந்தல் ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தலைமை யில் அப்பனந்தல் ஏரி அருகே சென்று சோதனை செய்தனர் அப்போது ஏரியில் சுமார் 900 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டி யார்பாளையம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய சுந்தரத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×