search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே 120 லிட்டர் சாராயம் பறிமுதல் 2 பேர் கைது
    X

    சின்னசேலம் அருகே 120 லிட்டர் சாராயம் பறிமுதல் 2 பேர் கைது

    • கல்லானத்தம் கிராமத்தில் சாராயம் விற்று வரு வதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பதிவு இல்லா இருசக்கர வாகனமும் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப் சாராயத்தை கைப்பற்றியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கல்லானத்தம் கிராமத்தில் சாராயம் விற்று வரு வதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீ ஸ்சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    கல்லாநத்தம் கிராம த்தில் நாச்சியப்பன் கோவில் பின்புறம் உள்ள ஓடையில் சாராயம் விற்பனை செய்த வந்த ராமச்சந்திரன் மற்றும் அருளை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பதிவு இல்லா இருசக்கர வாகனமும் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப் சாராயத்தை கைப்பற்றி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×