search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகாதினம்"

    • புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல்-தொழில் நுட்பக்கல்லூரியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடபட்டது
    • இதில் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை,

    மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நு ட்பக்கல்லூரி யில் சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டது. மவுன்ட்சியோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜெய்சன் ஜெய பரதன் வழிகாட்டுதலின் கீழ், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் ஜெயசீலன் மேற்பார்வையின் கீழ் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியம் மற்றும் சுய முன்னே ற்றத்திற்கான அர்ப்ப ணிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களை ஒன்றி ணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த சர்வதேச யோகாதினம் அமைந்தது. வாழ்க்கையை நேர்மறை யாக மாற்றுவதற்கும் ஆரோக்கியமான மற்றும் இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கும் யோகாவின் ஆற்றலை நினைவூட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்தது. உடற்கல்வி இயக்குனர், செல்வகண்ணன் நன்றி தெரிவித்தார்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நந்தகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது ''யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் ெசயல்'' உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர யோகா உதவுகிறது. படிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தினமும் யோகா செய்வது நல்லது என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலகு, மாணவர் சேவை அலகு ஆகிய பிரிவைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    • புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் சர்வதேச யோகாதின கொண்டாட்டபட்டது
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா பாண்டியன் யோகா பயிற்சிகள் குறித்து விளக்கமளித்தார். அதைதொடர்ந்து கௌரவ விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துணைஇயக்குனர் டாக்டர் ரமேஷ், சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமையத்தின் இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    பின்னர் சர்வதேச மாநில, மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் உதயகுமார் வரவேற்றார். விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விஷாலி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டர். முடிவில் யோகா புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் யோகா தின பேரணி நடந்தது.
    • பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோகாதின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சண்முகராஜா கலையரங்கம் முன்பாக தொடங்கி பேருந்து நிலைய பகுதிகள் வரை நடைபெற்ற பேரணியில் பள்ளியின் நன்மாணாக்கர் சான்று பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஆரோக்கியதேவி, சிவகலா, பௌமியா, சர்மிளா மற்றும் நகர்ப்பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆதிலிங்க போஸ் தலை மையில் ஜெயபாலன், ராஜ்குமார், முத்தையா, ஆனந்தகுமார் ஆகியோர் தகுந்த பாதுகாப்பு வழங்கி பேரணியினை சிறப்பாக நடத்தினர்.

    பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தியாகராசன், அனிதா, சுரேஷ்கண்ணன், அகிலாண்டேசுவரி, பாண்டியராஜன், சந்திரலேகா, முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×