search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூன்றாவது டெஸ்ட்"

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கோலி மற்றும் ரகானே ஜோடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. உணவு இடைவேளைக்குள் இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார். கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர்.
     
    இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி - அஜிங்க்யா ரகானே ஜோடி 150 ரன்கள் சேர்த்துள்ளது.

    இதற்கு முன்னதாக, கடந்த 2002-ல் லீட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சஞ்சய் பங்கர் - டிராவிட்ஜோடி 170 ரன்களை எடுத்துள்ளது. அதேபோல், டிராவிட் - டெண்டுல்கர் ஜோடி150 ரன்களையும், டெண்டுல்கர் - கங்குலி ஜோடி 249 ரன்களையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். 
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

    இந்திய அணி தேனீர் இடைவேளை வரை 56 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்களுடனும், ரகானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  #ENGvIND #INDvENG
    நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். 
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இந்திய அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.  #ENGvIND #INDvENG
    நாட்டிங்காமில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் மறைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகருக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    போட்டி தொடங்குவதற்கு முன்னர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் வரிசையில் நின்று சமீபத்தில் மரணமடைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #ENGvIND #INDvENG
    நாட்டிங்காமில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இந்த டெஸ்டில் ரிஷப் பந்த் அறிமுக ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #ENGvIND #INDvENG
    ×