search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன்குன்றம்"

    • யாகசாலை பூஜையுடன் 13-ந்தேதி தொடங்குகிறது
    • முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள முருகன்குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழா 19-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான வருகிற 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.6மணிக்கு விஸ்வரூபதரி சனமும்7மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.8-30மணிக்கு சிறப்பு வழிபாடும்.

    9மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது.10 மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடக்கிறது, 10-45.மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கும் திரு வேலுக்கும் 18 கும்ப கலச சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு சிறப்பு வழிபாடும், பகல் 12 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடும் நடக்கிறது. மாலை 3 மணிக்கு திருவிளக்கு சகஸ்ரநாம வழிபாடு நடக்கிறது.5-30மணிக்கு சமய உரையும், 6-30 மணிக்கு பஜனையும் இரவு 7-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    இந்த கந்த சஷ்டி விழா வருகிற 19-ந்தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் காலை7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 8-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. பின்னர்.காலை 9 மணிக்கு கும்ப கலச யாக பூஜையும் அதைத் தொடர்ந்து 10மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. 6-வது நாளான18-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் தேரிவிளைகுண்டலில் இருந்து முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-வதுநாளான19-ந்தேதி காலை 8-45 மணிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் 10மணிக்கு திருக்கல்யா ணவைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன்இந்திர வாகனத்தில்பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது.பகல்12மணிக்கு மங்களதீபாராதனையும், 12-30 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 6-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • பக்தர்கள் சரண கோஷம் முழங்க 6 முறை மலையை சுற்றி வலம் வந்தனர்
    • கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தையொட்டி நேற்று மாலை கந்தகிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலையில் விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து அபிஷேகமும் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அதன் பிறகு யாகசாலை பூஜை ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பூர்ணா குதி மற்றும் தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கும் திருவேலுக்கும் கும்பகலச சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் முருகனுக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் பிறகு அன்னதானம் நடந்தது. மாலையில் திருவிளக்கு சகஸ்ர நாம வழிபாடும் அதைத் தொடர்ந்து கந்தகிரிவலமும் நடந்தது.

    அப்போது ஏராளமான முருகபக்தர்கள் முருகன் குன்றம் மலையை சுற்றி சரண கோஷங்கள் முழங்க 6 தடவை வலம் வந்தனர். இரவு பஜனையும் அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடும் அலங்கார தீபாராதனையும்நடந்தது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது.

    இதை யொட்டி நேற்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15மணிக்கு கணபதி ஹோமமும் நடந்தது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும் 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன் பின்னர் 9.30 மணிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம், மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன்பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து, ரோஸ் உள்ளிட்ட பலவகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.

    பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • 23-ந்தேதி காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடக்கிறது
    • பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடிகிருத்திகை விழா சிறப்பாக கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும் 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    அதன்பின்னர் 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து உள்ளிட்ட பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது. பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×