search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
    X

    கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

    • யாகசாலை பூஜையுடன் 13-ந்தேதி தொடங்குகிறது
    • முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள முருகன்குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழா 19-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான வருகிற 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.6மணிக்கு விஸ்வரூபதரி சனமும்7மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.8-30மணிக்கு சிறப்பு வழிபாடும்.

    9மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது.10 மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடக்கிறது, 10-45.மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கும் திரு வேலுக்கும் 18 கும்ப கலச சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு சிறப்பு வழிபாடும், பகல் 12 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடும் நடக்கிறது. மாலை 3 மணிக்கு திருவிளக்கு சகஸ்ரநாம வழிபாடு நடக்கிறது.5-30மணிக்கு சமய உரையும், 6-30 மணிக்கு பஜனையும் இரவு 7-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    இந்த கந்த சஷ்டி விழா வருகிற 19-ந்தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் காலை7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 8-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. பின்னர்.காலை 9 மணிக்கு கும்ப கலச யாக பூஜையும் அதைத் தொடர்ந்து 10மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. 6-வது நாளான18-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் தேரிவிளைகுண்டலில் இருந்து முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-வதுநாளான19-ந்தேதி காலை 8-45 மணிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் 10மணிக்கு திருக்கல்யா ணவைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன்இந்திர வாகனத்தில்பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது.பகல்12மணிக்கு மங்களதீபாராதனையும், 12-30 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 6-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×