search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை விலை"

    • நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
    • வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம், கேரளாவில் விற்பனை ஆகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டைகள் செல்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் முட்டை உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது . அதன்படி 520 காசுகளாக இருந்த முட்டை விலை 525 காசுகளாக உயர்ந்தது.

    வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக முட்டை விலை 515 காசுகளாக நீடித்தது.

    இந்த நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-580, பர்வாலா-458, பெங்களூர்-570, டெல்லி-472, ஹைதராபாத்-505, மும்பை-565, மைசூர்-575, விஜயவாடா-480, ஹொஸ்பேட்-530, கொல்கத்தா-552.

    நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வழங்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பல்லடத்தில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கறிக்கோழி உயிருடன் ரூ.139 ஆக இருந்த நிலையில் 2 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.146 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. இதனால் உரித்தகோழி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை சேலம், நாமக்கல் மாவட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடும் வெயிலால் கோழியின் எடை குறைந்ததால் கறிக்கோழி விலை உயர்ந்ததாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முட்டைக்கோழி நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    • முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது.
    • முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை கோழி விலை, நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று 1௦௦ ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை, 97 ரூபாயாக குறைக்கப்பட்டது.

    இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.129 ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    • கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை விலை நேற்று மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-570, பர்வாலா-472, பெங்களூர்-565, டெல்லி-491, ஹைதராபாத்-495, மும்பை-560, மைசூர்-572, விஜயவாடா-515, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-540.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.128 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.107 ஆக நிர்ணயித்துள்ளது.

    • முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நாமக்கலில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 500 காசுகளாக இருந்த முட்டை விலை, 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை, படிப்படியாக அதிகரித்து இன்று 505 காசுகளாக இருப்பதால் ஒரே மாதத்தில் முட்டை விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருப்பது முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    கறிக்கோழி விலை 127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் நீடிக்கும் என பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது.
    • கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே மாதத்தில் 95 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:- சென்னை-550, ஐதராபாத்-480, விஜயவாடா-505, பர்வாலா-467, மும்பை-535, மைசூர்-550, பெங்களூரு-545, கொல்கத்தா-565, டெல்லி-489, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.127 ஆகவும், இதே போல முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.96 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    • முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.
    • அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.

    நாளை முதல் கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கான விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் வாதித்தனர்.

    பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 485 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசு உயர்த்தி 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதேபோல முட்டை கோழி பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 96 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 122 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
    • முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 475 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை கோழிகளின் விலை நாமக்கல்லில் 3 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் முட்டை கோழிகளின் உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 94 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை, 91 ரூபாயாக குறைந்தது. இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 122 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 475 காசுகளாக நீடிக்கிறது.

    • முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது.
    • முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது. அதன்படி 465 காசுகளாக இருந்த முட்டை விலை 470 காசுகளாக உயர்ந்தது.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் முட்டை விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது.
    • ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 12-ந்தேதி ரூ.109 ஆக இருந்த கறிக்கோழி விலை, நேற்று ரூ.116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது.

    கறிக்கோழி தேவை அதிகரித்து உள்ள நிலையில் கடும் வெயிலால் அதன் எடை குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மீன்பிடி தடையால் விற்பனை தடை இன்றி நடைபெறுவதும், மைனஸ் விலை இல்லாததாலும் தற்போதைய விலையே தொடரலாம் என பண்ணையாளர்கள் என்.இ.சி.சி கமிட்டி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை அடுத்து முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது. ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது.
    • கடந்த 8-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முட்டை விலை 15 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத்தேவையில்லை.

    முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்.இ.சி.சி அறிவித்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-

    சென்னை 505, பர்வாலா 469, பெங்களூர் 510, டெல்லி 490, ஹைதராபாத் 455, மும்பை 505, மைசூர் 515, விஜயவாடா 485, ஹொஸ்பேட் 470, கொல்கத்தா 550.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.106 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக சி.கா நிர்ணயித்துள்ளது.

    ×