search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை விலை"

    • நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த நிலையில் நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 6ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 9ந் தேதி முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆனது. இந்த நிலையில் நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 88 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
    • முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 2-ந்தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.15-ல் இருந்த 15 பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.20ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முட்டை விலை குறைந்ததால், ஒரு சில பண்ணைகளில் வியாபாரிகள் என்இசிசி விலையை விட மைனஸ் விலைக்கு முட்டையை கேட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் பல லட்சம் முட்டைகள் என்இசிசி விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் முட்டை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 475, பர்வாலா 477, பெங்களூர் 460, டெல்லி 483, ஹைதராபாத் 440, மும்பை 485, மைசூர் 460, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 420, கொல்கத்தா 555.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • முட்டை விலை மேலும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 400 காசுகளாக குறைக்கப்பட்டது.
    • முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற, என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று மாலை நடைபெற்றக் கூட்டத்தில் முட்டை விலை மேலும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 400 காசுகளாக குறைக்கப்பட்டது.

    இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணை யாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணை யாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பர்வாலா 472, பெங்களூரு 450, டெல்லி 490, ஐதராபாத் 450, மும்பை 505, மைசூரு 450, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 410, கொல்கத்தா 550.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
    • தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வடமாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை 560 காசுகள் வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 23-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக இருந்தது.

    26-ந்தேதி முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மேலும் 20 காசுகள் குறைந்து முட்டை விலை 430 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் அதே விலை நீடிக்கிறது. தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முட்டை விலை சரிவுக்கான காரணம் குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:- நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 1 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது . கேராளாவில் நாளை (29-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த சில நாட்களாக கேரளாவில் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஓணம் பண்டிகை முடிந்ததும் மீண்டும் ஏற்றுமதி உயரும் போது முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.110 ஆக நீடிக்கிறது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பிராய்லர் கோழி மற்றும் முட்டை கோழி விலைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கடந்த 23-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக இருந்தது.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படு கின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிஇ கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது .

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசா வில்) : சென்னை 510, பர்வாலா 461, பெங்களூர் 480, டெல்லி 475, ஐதராபாத் 435, மும்பை 500, மைசூர் 482, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 545.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.110 ஆக பிசிசி அறி வித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

    • கடந்த 20-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 20-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 14-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விலை படிப்படியாக குறைந்து 450 காசுகளாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

    கோழிவிலை

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 123 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று பல்லடத்தில் கறிகோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 123 ரூபாயில் இருந்த கறிக்கோழி விலை 118 ரூபாயாக குறைந்தது . முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக நீடிக்கிறது.

    • முட்டை கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
    • 90 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 85 ரூபாயாக சரிந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், பல்லடம், ஈரோடு உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழியில் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ருபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 114 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 119 ரூபாயாக உயர்ந்தது.

    நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 90 ரூபாயாக இருந்த முட்டை கோழிவிலை 85 ரூபாயாக சரிந்தது. ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 470 காசுளாக நீடிக்கிறது.

    • நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இன்று முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கோழிவிலை பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
    • முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த 1-ந்தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 480, பர்வாலா 384, பெங்களூரு 465, டெல்லி 398, ஐதராபாத் 405, மும்பை 460, மைசூர் 457, விஜயவாடா 420, ஹொஸ்பேட் 425, கொல்கத்தா 495.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.
    • கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதே போல முட்டைக்கோழி கிலோ ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.

    எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.78 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தமுடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது.

    ×