search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு அணை"

    திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் நேற்று இரவு உடைந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், இன்று மேலும் ஒரு மதகு உடைந்தது. #MukkombuDam
    திருச்சி:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

    இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மதகு (14-வது மதகு) இடிந்து விழுந்தது.



    முக்கொம்பு அணையில் அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. #MukkombuDam
    முக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #Mukkombudam
    திருச்சி:

    கர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு வந்தடைந்த தண்ணீரால் அடுத்தடுத்து அணை 2 முறை நிரம்பியது.

    இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு கரைபுரண்டு செல்கிறது.

    தொடர்ந்து அந்த தண்ணீர் நேற்று கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனால் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 1 லட்சத்து 56 ஆயிரம் கன அடி தண்ணீருடன், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் 50 ஆயிரம் கனஅடி நீர் ஈரோடு அருகே காவிரியில் கலக்கிறது.

    அதேபோல் திருப்பூரில் உள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒன்று சேர்ந்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் கலக்கிறது. இதன்மூலம் மாயனூர் கதவணைக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரத்து உள்ளது. அங்கிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களிலும் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வரத்து ஒரு லட்சத்து 97 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 50 ஆயிரத்து 146 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் 2 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்ற காட்சி

    2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கொள்ளிடத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் முழுவதுமாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு கீழணையில் இருந்த இவ்வளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.  #Mukkombudam
    ×