search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகூர்த்த நாள்"

    • திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.
    • திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருத்தணி:

    பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் திருத்தணி கோவிலுக்கு தற்போது வரும் பக்கதர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்ந நிலையில் இன்று வைகாசி மாதத்தில் வரும் முதல் சுப முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

    மேலும் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. திருமணகோஷ்டி மற்றும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.

    புதுமணத்தம்பதிகள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்போரூர்

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருமண கோஷ்டியினர் வந்த வாகனங்களால் திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
    • தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது.

    இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்கள் வாங்குவர்.

    விஷேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று அதிகரிக்கும். வரத்து , விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகளவில் தேவைப்பட்டது. இதனால் இன்று தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலையும் சற்று அதிகரித்தது.

    அதன்படி மல்லிகை கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேப்போல் முல்லை கிலோ ரூ.800, ஆப்பிள் ரோஸ் ரூ.250, கனகாம்பரம் கிலோ ரூ.800, சம்பங்கி ரூ.600, அரளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன.

    நேற்றும் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது. தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளதால் சுபநிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கும். இதனால் பூக்களின் தேவையும் அதிகரிக்கும்.

    அதன் அடிப்படை யிலேயே இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது . பூக்களின் வரத்தும் பரவலாக உள்ளது என்றனர்.

    ×