search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் மோட்டார்கள்"

    • அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது.
    • விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    உடுமலை ,மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.
    • சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்லும் இடத்தில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்களில் இணைப்பு கொடுத்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சேகல்- நாட்டார்மங்கலம் சாலையில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு மின்விநியோகம் செய்யப்படும் சேகல் சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்லும் இடத்தில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்களில் இணைப்பு கொடுத்துள்ளது.

    காற்று வேகமாக வீசும் நேரங்களில் இந்த வயர்கள் அறுந்து சாலையில் விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துகிறது.

    மேலும் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்தும்,

    சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும்,சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து அதிகாரிகள் உடன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர்,எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பகுதிகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன.
    • முதற்கட்டமாக தற்போது 16 மின்மோட்டார்கள் வாங்க இருக்கிறோம். அதில் 20 ஹெச்பி மோட்டார்கள் 6 வாங்கப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் லிங்கம் நகர், பாத்திமா நகர், எ.யூ.டி. நகர் ஆகிய பகுதிகள் வெள்ளக்கார மாறியது. இந்தப் பகுதிகளில் மழை நின்ற பின்னரும் தண்ணீர் வடிவதற்கு பல தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அதேபோன்று கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர்,எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பகுதிகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் நீர்வளத் துறை சார்பில் அரியாறு, கோரையாறு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் மாநகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைக்காலங்களில் வெள்ள நீர் புகுவதை தடுக்கவும், காலி மனைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை உடனடியாக அப்புற ப்படுத்தவும் மின்மோட்டார்கள் வாங்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

    இது தொடர்பாக மேயர் மு. அன்பழகன் கூறும்போது, முதற்கட்டமாக தற்போது 16 மின்மோட்டார்கள் வாங்க இருக்கிறோம். அதில் 20 ஹெச்பி மோட்டார்கள் 6 வாங்கப்பட உள்ளது.

    இந்த மின்மோட்டார்கள் அதிகம் மழை நீர் தேங்கும் டோபி காலனி, கிருஷ்ணாபுரம், ராஜீவ் காந்தி நகர்,செக் போஸ்ட், ஆதிநகர், எ.யூ. டி.நகர் ஆகிய பகுதிகளில் நிறுவப்பட உள்ளது. இந்த மின்மோட்டார் மூலம் ஒரு நிமிடத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும். அதே போன்று 10 ஹெச்பி மின்மோட்டார் மூலம் பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றலாம்.

    இந்தப் பகுதிகளில்மின்மோட்டார் களை நிறுவுவதற்கு காங்கிரீட் தாளங்கள் அமைக்கப்படும். இந்த பணிகள் சில இடங்களில் தொடங்க ப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மின் மோட்டார்கள் பொருத்தும் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.


    ×