search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் ஊழியர்கள் போராட்டம்"

    • மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.
    • முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒலி முகமது பேட்டையில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இ-டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரியும் கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களையும் எழுப்பினர்.

    போராட்டத்தினை ஆர். மதியழகன் தலைமையேற்று நடத்தினார். கோட்டி மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், கோட்டி காஞ்சிபுரம் செயலாளர் படவேட்டான், கோட்டி திட்ட பொறுப்பாளர் பி. கேசவன், திட்டத் துணைத் தலைவர் ஆர். பாபு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் ஸ்ரீதர், ஒப்பந்த ஊழியர் சி.கலைமணி மற்றும் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி போராட்டம் இன்று நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி போராட்டம் இன்று நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் ஊழியர்கள் திரண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து ஊழியர்கள் குவியத்தொடங்கினர்.

    முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்கவும், 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவும் நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட் சோர்சிங் முறைக்கு விடக் கூடாது. 1.12.2019 முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் ஐ.என்.டி.யு.சி. சேவியர், எச்.எம்.எஸ்.சுப்பிரமணி, தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் கு. பாவலன் உள்ளிட்ட 11 சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். மின்வரியத்தில் 86 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிரார்கள். இவர்களின் பல்வேறு கோரிக்கைகளின் மீது வாரிய நிர்வாகம் பலமுறை அழைத்து பேசி முடிவு பெறாமல் உள்ளது.மின்வாரிய பணியாளர்கள் மத்தியில் தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி விடும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

    புதுச்சேரி:

    மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மின் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என கூறியிருந்தனர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆவடியில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (துணை ராணுவம்) வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அடையாள அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று இரவு புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வளாகத்தினுள் அமர்ந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்களுக்கு போலீசார் 2 முறை எச்சரிக்கை விடுத்தனர்.

    அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி போலீசாரால் தேடப்படும் மின் துறை ஊழியர்கள் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருப்பது சட்டவிரோதமானது. ஆகையால் போலீசாரால் தேடப்படும் நபர்கள் இருந்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வேலை நேரத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.

    இப்போது உடனே கலைந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்து 5 நிமிடம் அவகாசம் வழங்கினர்.

    அதன் பிறகும் அவர்கள் கலைந்து போகாததால் நள்ளிரவு 11 மணி அளவில் 300-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை 5 பஸ்களில் எற்றி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் கொண்டு சென்றனர்.

    கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

    இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சி.பி.டி.யு. புதுவை மின்துறை ஊழியர் சங்க தலைவர் முருகசாமி செயற்குழு உறுப்பினர் நடராஜ் ஆகிய 2 நிர்வாகிகளை புதுவை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×