search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ-டெண்டர் முறையை ரத்து செய்யகோரி காஞ்சிபுரத்தில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
    X

    இ-டெண்டர் முறையை ரத்து செய்யகோரி காஞ்சிபுரத்தில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

    • மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.
    • முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒலி முகமது பேட்டையில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இ-டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரியும் கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களையும் எழுப்பினர்.

    போராட்டத்தினை ஆர். மதியழகன் தலைமையேற்று நடத்தினார். கோட்டி மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், கோட்டி காஞ்சிபுரம் செயலாளர் படவேட்டான், கோட்டி திட்ட பொறுப்பாளர் பி. கேசவன், திட்டத் துணைத் தலைவர் ஆர். பாபு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் ஸ்ரீதர், ஒப்பந்த ஊழியர் சி.கலைமணி மற்றும் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×