search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அரசு"

    • ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
    • கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.

    புதுவையில் உள்ள ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேராசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் இல்லை என பலவித புகார்கள் எழுந்து வருகிறது.

    மேலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட் பயன்பாடு குறித்த வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை. இதுகுறித்து மாணவர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.

    இதனையறிந்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் அல்ட்ரா சவுண்ட் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் நான் சிறப்பு நிபுணர்.

    எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளேன்.

    என் பணி புதுவை மக்கள் மீது அன்பு வைத்து செய்யும் பணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் தற்போது சொல்ல முடியாது. நான் தற்போது கவர்னர். அந்த பணியை செய்து வருகிறேன். நான் போட்டியிடுவதை ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை.
    • நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    திருச்சி:

    நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    நெல்லின் ஈரப்பதத்தை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம். மேலும் இது காலம் கடந்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    கடற்பரப்பு அதிகம் கொண்ட டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் மற்றும் அதன் மூலம் பெய்யும் பருவம் தவறிய மழையும் எப்போதும் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது கிடையாது.

    அதேபோல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன.

    தற்போது நல்ல வெயில் அடித்து அனைத்து விவசாய நிலங்களிலும் அறுவடை என்பது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி தற்போதுதான் மத்திய அரசு அனுமதியே வழங்கியுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவைகளை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான முன்மொழிவுகளை மாநில அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

    அதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு சிறப்பு அதிகாரத்தை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி பெற்றால்தான் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியும். நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    இரண்டு பருவ கால மழையை கொண்டுள்ள தமிழ்நாட்டில் வருங்காலங்களில் மாநில அரசே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 
    • ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    சென்னை:

    மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    உதாரணத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி என்றால் அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோ அரிசிக்கு ரசீது தனியாகவும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கும் தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும். 

    ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    புதிய விதிமுறைகளை கடைபிடிக்காமல், பொருட்களை விநியோகம் செய்தால் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
    • பொருளாதார நெருக்கடியில் பொறுப்பேற்றால் கூட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருட்களை படிப்படியாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு பால் வரியை உயர்த்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கியாஸ் விலையையும் உயர்த்தி இருக்கிறது. தமிழகத்தில் நிதி சுமைக்கு மத்தியிலும் வரி உயர்த்தப்படாமல் உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வரியை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும்.

    தமிழகத்தில் வேட்டி, சேலை கொடுக்கும் திட்டத்துக்கு மூடு விழா நடத்துவதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள்.

    ஆனால் அவர், அரசு என்ன செய்கிறது? என்ன செய்யப்போகிறது? என்பதை பற்றி தெரியாமல் பேசி வருகிறார். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் பொறுப்பேற்றால் கூட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு ஜி.எஸ்.டி.யால் மக்களை நசுக்கி வருகிறது. எனவே பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×