search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி வளர்மதி"

    புழல் ஜெயிலில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வளர்மதியுடன் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம்:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் நிதி திரட்டப்பட்டது. இதனை உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஸ்டாலின் என்பவர் தனது செல்போனில் படம் பிடித்ததால் தகராறு ஏற்பட் டது.

    இது தொடர்பாக மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 25-ந் தேதி முதல் வளர்மதி ஜெயிலில் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நலம் தேறியதும் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர்.

    இன்று வளர்மதி 4-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு கைதான மாணவி வளர்மதி புழலில் உள்ள பெண்கள் சிறையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #valarmathi
    செங்குன்றம்:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

    இதற்காக, இந்த அமைப்பினர் நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே தாரை தப்பட்டை முழங்க பாட்டுபாடி உண்டியல் வசூல் செய்தனர் இதை உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் செல்போனில் படம் பிடித்தார்.

    இதற்கு உண்டியல் வசூலில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அவர்தொடர்ந்து படம் பிடித்தார். இதனால் ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஏட்டு ஸ்டாலினுக்கு அடி- உதை விழுந்தது. இதையடுத்து, அவரது புகாரின் பேரில் உண்டியல் வசூல் நிகழ்ச்சியில் பங்கேற்பு பொதுநல மாணவர் இயக்கத்தின் செயலாளரான மாணவி வளர்மதி(23) மற்றும் இந்த இயக்கத்தை சேர்ந்த அருந்தமிழன், காளிமுத்து, சாஜன், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 6-ந்தேதி வரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி வளர்மதி புழலில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இவர், நடந்த சம்பவத்துக்கு காரணமான உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #valarmathi
    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #Valarmathi
    சென்னை:

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வடபழனி போலீசார் வளர்மதி மீது ஏற்கனவே ஜனவரி மாதம் தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் இப்போது வளர்மதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் அச்சமில்லை, அச்சமில்லை என்ற பெயரில் ஆடியோ ஒன்று கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளர்மதி பேசினார். அவரது பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் தேச துரோக செயலில் ஈடுபடும் வகையில் இருந்ததாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில்தான் இப்போது வளர்மதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் போடப்பட்ட வழக்கில் வளர்மதியை கைது செய்ததற்கான உத்தரவை சேலம் மத்திய சிறையில் போலீசார் ஒப்படைத்திருந்தனர். இதனை ஏற்று அந்த வழக்கில் ஆஜர் படுத்துவதற்காக சேலத்தில் இருந்து வளர்மதியை சென்னைக்கு அழைத்து வந்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த வழக்கிலும் நீதிமன்ற காவலில் வளர்மதி சிறையில் அடைக்கப்பட உள்ளார். #Valarmathi
    ×