என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாட்டு வண்டி பறிமுதல்"
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட கெடிலம் ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் அசோக், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் உடையானந்தல் வந்தனர்.
அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப் பிடித்தனர். மாட்டு வண்டியின் உரிமையாளரான மணிகண்டன், பெருமாள் வெங்கடேசன், வீரமணி, ஆகிய 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். உடனே 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- விருத்தாசலத்தில் போலீசார் அதிரடி மணல் கடத்திய மாட்டுவண்டிகள்- ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
- நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடலூர்:
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆற்றில் மணல் கடத்திவிட்டுஆலடி ரோடு வழியாக வந்து கொண்டிருந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதேபோல விருத்தாசலம் பூதாமூர் அருகே உள்ள ஏனாதிமேடு என்ற பகுதியில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ஆட்டோ ஒன்றை பிடிக்க போலீசார் பிடிக்க முயன்றபோது ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டி வந்த நபர் தப்பி ஓடினார். மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்