search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of Bullock Cart"

    • 2 பேர் கைது
    • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீசார் நேற்று இறைவன்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் இறைவன்காடு பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது 48), கல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பதும், இவர்கள் அனுமதி இன்றி மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    திருநாவலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட கெடிலம் ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் அசோக், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் உடையானந்தல் வந்தனர்.

    அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப் பிடித்தனர். மாட்டு வண்டியின் உரிமையாளரான மணிகண்டன், பெருமாள் வெங்கடேசன், வீரமணி, ஆகிய 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். உடனே 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×