search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழையில் போராட்டம்"

    • ஏரி ஆக்கிரமிப்பில் 234 வீடுகளை இடிக்க எதிர்ப்பு
    • கமிஷனரிடம் மனு அளித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 234 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 234 வீடுகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பலவன் சாத்து பொதுமக்கள் இன்று காலை வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனவே இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமரிடம் மனு அளித்தனர்.

    அதில் பலவன் சாத்து ஏரி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம்.இதில் பள்ளி மாணவர்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்ளனர்.

    ஏரி தண்ணீர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு எப்போதும் வருவது கிடையாது. எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். மாறாக எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி கமிஷனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன.
    • முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.

     ஊட்டி:

    ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நகராட்சி நிா்வாகம் சாா்பில்கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி நிா்வாகத்தினா் பெரும்பாலான கடைகளை கடந்த வாரம் அகற்றினா். இதனால், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இது குறித்து வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டனா்.

    இதையடுத்து, மீதமிருந்த கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டனா். இதைக் கண்டித்து ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் கொட்டும் மழையிலும் குழந்தைகள் உள்பட தங்களது குடும்பத்தினருடன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத்தினா், வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய தையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் நடைபாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. தற்போது இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட உள்ளன. அதன் பின்னா் முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும். 

    ×